மது கொடுக்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

தர்மபுரி, ஜன.18: பாலக்கோடு அண்ணா நகரைச் சேர்ந்த ராஜா மகன் சத்தியமூர்த்தி(22). இவர் கடந்த 15ம் தேதி இரவு, நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தொழிலாளி செல்வம் (24) என்பவர், சத்தியமூர்த்தியிடம் மது கேட்டுள்ளார். ஆனால் சத்தியமூர்த்தி கொடுக்க மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சத்தியமூர்த்தியின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி