மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி சாவு

 

திட்டக்குடி, ஜூன் 19: திட்டக்குடி அடுத்துள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன்(40), கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 16ம் தேதி மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் ஏன் தினந்தோறும் குடித்துவிட்டு வருகிறாய் என கேட்டு திட்டியுள்ளனர். இதனால் வேதனையடைந்த மணிகண்டன் அன்று மதியமே வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரவும் வீடு திரும்பவில்லை.

மணிகண்டன் கடந்த 17ம் தேதி பெருமுளை ஏரிக்கரை அருகே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், உறவினர்கள் அங்கு சென்று விசாரித்ததில் மணிகண்டன் மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இறந்தார்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி