மதுரை, செப். 25: மதுரை மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மதுரை, காரியாபட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்து மொத்தவிலைக்கு விற்கின்றனர். இந்த பூ மார்க்கெட் முன்பாக பழைய காய்ந்த மரப் பொருட்கள் உள்ளிட்ட வீணான பொருட்கள் கிடந்தன. இவற்றில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.