மதுரை தெப்பக்குளத்தை சுற்றிலும் புதிய சாலைகள் அமைக்க எம்எல்ஏ மனு

மதுரை, ஜூன் 23: மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனுஅளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரியம்மன் தெப்பக்குளம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர தெப்பக்குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் மாலை நேரங்களில் பொழுதுபோக்க ஆயிரக்கணக்கில் தினமும் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களும் இயங்கி வருகிறது. இதனை சுற்றியுள்ள சாலைகள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை