மதுரையில் தம்பதியை தாக்கி செல்போன் பறிப்பு

 

மதுரை, பிப். 6:மதுரை காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சிந்து மோகன் (31). இவரது மனைவி முத்துமாரி (26). நேற்று முன்தினம் தம்பதி, தங்கள் குழந்தையுடன் சொக்கலிங்க நகர் 7வது தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சொக்கலிங்க நகர் 1வது குறுக்கு தெரு அருகே வந்த போது, அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், சாம்டேவிட் உள்பட 5 பேர் வாகனத்தை வழிமறித்துள்ளனர். பின்னர் சிந்து மோகனிடம் தகராறு செய்து அவரையும், முத்துமாரியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து செல்போனை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிந்து சஞ்சய், சாம்டேவிட் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

 

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்