மதுரையில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

மதுரை: மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கவிதா(45). இவர் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு, வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றபோது கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் அவரை டூவீலரில் பின்தொடர்ந்தார். பின் திடீரென அவர் கவிதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்மேடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் சௌந்தரபாண்டியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது மதுரை மாநகர் காவல் நிலையங்களில் மட்டும் 14க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை