மதுரை, ஆக. 15: மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக இருந்த லோகநாதன் மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவர் கூறுகையில், ‘மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைவான நடவடிக்கை இருக்கும். புதிய தொழில்நுட்பங்களை காவல்துறையில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது, தாமதப்படுத்தாமல் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் காட்டப்படுவதுடன், இதன்பேரில் விரைந்து செயல்படவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்படும்’ என்றார்.