விருத்தாசலம், செப். 19: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார், தே.கோபுராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவரை பிடித்து கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 30 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கச்சிபெருமாநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள சாலையில் அரசு மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்த உதயகுமார் (54) என்பவரை பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்த 10 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.