மார்ச் 12: மங்கலம்பேட்டை அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அருகேயுள்ள பாலக்கொல்லை பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக ஆலடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(21) என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, விக்னேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது மங்கலம்பேட்டை,
previous post