மதுபாட்டில் விற்றவர் கைது

ஊத்தங்கரை, செப்.27: ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு அருகே அருணபதி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த மனீலா (55) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது