ஊத்தங்கரை, செப்.27: ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு அருகே அருணபதி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த மனீலா (55) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.