மதிமுக நிர்வாகிகள் கூட்டம்

 

சிவகங்கை, ஜூலை 25: சிவகங்கையில் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் சிறப்புரையாற்றினார். தாம்பரம் முதல் செங்கோட்டை வரையும், செங்கோட்டை முதல் தாம்பரம் வரையும் வாரத்தில் மூன்று நாட்கள் செல்லும் ரயிலை மாவட்ட தலைநகரான சிவகங்கை மற்றும் மானாமதுரையில் நின்று செல்ல தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் மூலம் 2லட்சம் கையெழுத்து பெறுவது, செப்.15ல் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சார்லஸ், நிர்வாகிகள் விஜயகுமார், கண்ணன், அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை