மண்டபம்,செப்.30: மண்டபம் பேரூராட்சி பகுதியில் வாரச்சந்தை நடைபெற்று வரும் பகுதியில், அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் செய்தார். மண்டபம் பேரூராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இச்சந்தையில் மண்டபம் பேரூராட்சி வசித்து வரும் மக்கள் மட்டுமல்லாமல் மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வருகின்றனர்.
அதுபோல மதுரை,ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த காய்கறி மற்றும் மளிகை பொருள்களை வியாபாரிகளும் அதிகமானோர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தையில் விற்பனையாகும் பொருட்களின் தரம் குறித்தும் பொருள் வாங்க வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் கூடுதல் மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.