மணிப்பூர் வன்முறையை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: நாசர் எம்எல்ஏ பங்கேற்பு

 

ஆவடி: மணிப்பூர் வன்முறையை கண்டித்து நாசர் எம்எல்ஏ தலைமையில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூர் பாலியல் வன்கொடுமை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மகளிரணி சார்பில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.

தாய்மையை தலைகுனிய வைத்த மணிப்பூரையும், ஒன்றிய அரசையும் கண்டிக்கிறோம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டர்ணி, மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு