மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தருவைகுளத்தில் கண்டன ஊர்வலம்

குளத்தூர்,ஆக.7: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தருவைகுளத்தில் கண்டன ஊர்வலம் நடந்தது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தருவைகுளம் கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. தருவைகுளம் பங்குதந்தை வின்சென்ட் தலைமை வகித்து கண்டன ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்திலிருந்து துவங்கிய ஊர்வலமானது கொடிமர வீதி, குருசடி வீதி, பேருந்துநிறுத்தம், கெபி வழியாக சென்று மீண்டும் ஆலய வாசலில் இந்த ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் உதவி பங்குதந்தை சஜன், ஊர் நிர்வாகி மகாராஜன், தூத்துக்குடி மறைமாவட்ட பல்நோக்கு பணியக செயலாளர் சசிகலா மற்றும் ஆலய பங்குமக்கள், பொதுமக்கள் திரளாக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்