மணல் கடத்திய 2 பேர் கைது

 

திருச்சி, ஜூலை 21: திருச்சியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ரங்கம் கொண்டையம்பேட்டை விஏஓ பொன்னுரங்கபுரம் கொள்ளிடம் ஆற்று பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனை நடத்தினார். அதில் 2 யூனிட் மணலை அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து விஏஓ கொடுத்த புகாரின்பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து திருவானைக்காவல் திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த தண்டபாணி (25), விஜயபாஸ்கர்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பிஓடிய திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் மணலுடன் வேனையும் பறிமுதல் செய்தனர். இதில், மணிகண்டன் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை