மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

 

திருவில்லிபுத்தூர், ஜூன் 19: திருவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி எஸ்ஐ நமச்சிவாயம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலந்தைகுளம் கண்மாயில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பதிந்துள்ளது. இதை மற்றொரு டிராக்டர் மூலம் இழுத்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த போலீசாரை பார்த்ததும் பதிந்த டிராக்டரை நிறுத்திவிட்டு மற்றொரு டிராக்டரில் தப்பிவிட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை