மணலிக்கரை

குமாரபுரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் மணலிக்கரை வாழவிளை முக்கு சந்திப்பில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சேவா தள காங்கிரஸ் தலைவர் ராபர்ட் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி தக்கலை வட்டார தலைவர் ஜெபினோ, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியவேல், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சேவா தள மாநில பொதுச் செயலாளர் குமரி அந்தோணி முத்து கலந்து கொண்டார். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்