மணப்பாறை நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுப்பட்டியில், மகாதேவன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது: மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாதேவன். அவர் மகாதேவன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். அதை நம்பிய அதே பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் கந்தன் என்பவரும் தவணைகளில் ₹.1.25 லட்சம் முதலீடு செய்து வந்துள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி முதிர்வுத்தொகை மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதுபோல மேலும் பலரும் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி