எப்படிச் செய்வது?மணத்தக்காளி கீரையை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வேகவிட்டு ஆறவிடவும். மிக்சியில் தேங்காய்த்துருவல், முந்திரி, மிளகு சேர்த்து நன்றாக அரைத்து, வெந்த கீரையில் கொட்டி கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி உப்பு போட்டு கீரை கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.