மக்கள் தேவையை பூர்த்தி செய்வேன்: பெ.ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் நேற்று எழும்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மலர் தூவி, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்ற பொதுமக்கள், எங்கள் வாக்கு நிச்சயம் உங்களுக்கு தான் என உறுதி அளித்தனர். அப்போது ஜான்பாண்டியன் கூறுகையில், ‘இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்ற அடிப்படையில் அவற்றையெல்லாம் சரி செய்வேன். தற்போது அனைத்து பகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இந்த பகுதிகளில் 4 தலைமுறைகளாக பட்டா இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர். நிறைய சுகாதார கேடுகள் உள்ளன. மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதை விட அதனால் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக அறிகிறேன். ஓட்டுகள் எதிர்க்கட்சிகள் போடவிட்டாலும் அவர்களுக்கும் சேர்த்து பணி ெசய்வேன். இந்த தொகுதியில் இரட்டை இலையின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பெற்று தருவேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அன்போடு எங்களை வரவேற்கின்றனர். நிச்சயம் வெற்றி பெற்று மக்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வேன்,’ என்றார். …

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்