திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 281 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தல் நிலம் சம்பந்தமாக 83 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 62 மனுக்களும், வேலைவாய்ப்;பு தொடர்பாக 29 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 47 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 60 மனுக்கள் என மொத்தம் 281 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, மன வளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….