மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

 

ராஜபாளையம், ஜூலை 27: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமுசியாபுரம் ஊராட்சி சங்கரபாண்டியபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன், ராஜபாளையம் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், துணை சேர்மன் துரை கற்பகராஜ் மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால், மண்டல அலுவலர் அமுதா, வட்டாட்சியர் ஜெயபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துமாணிக்கம், சத்திய சங்கர், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

Related posts

சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் உவரி கடலில் விஜர்சனம்