சேந்தமங்கலம், ஜூலை 26: கொல்லிமலை ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பொன்னுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கொல்லிமலை ஒன்றியம், திருப்புலிநாடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், வட்டார அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் தலைமையில் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் சாய் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து குண்டூர்நாடு, குண்டனிநாடு, ஆலத்தூர்நாடு, திருப்புலிநாடு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், பிடிஓ.,க்கள் பத்மநாபன், ஈஸ்வரன், தாசில்தார் மனோகரன், பழங்குடியினர் திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் காளியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் ஆனந்தபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜய பிரகாஷ், செல்வராஜ், பானு, சுப்பிரமணி, சின்னபொண்ணு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
previous post