பூனே: மகாராஷ்டிரா ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன் இருவரும், ஏடிபி இரட்டையர் உலக தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பூனேவில் நேற்று முன்தினம் முடிந்த மகாராஷ்டிரா ஓபன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன் இணை சாம்பியன் பட்டம் வென்றனர். அதன் மூலம் இருவரும் ஏடிபி உலக தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதிலும் ராம்குமார் முதல்முறையாக 100 இ டங்களுக்குள் முன்னேறியுள்ளார். அவர் 14 இடங்கள் முன்னேறி 94வது இடத்தை பிடித்துள்ளார். ரோகன் 8இடங்கள் முன்னேறி 35வது இ டத்தில் உள்ளார். ‘இந்த வெற்றியின் மூலம் டென்மார்க் அணிக்கு எதிரான மார்ச் 4, 5 தேதிகளில், டெல்லியில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை பிளே ஆப் சுற்றை உற்சாகத்துடன் எதிர்கொள்வோம்’ என்று ரோகன் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் ரோகனுடன், ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், திவிஜ் சரண், யூகி பாம்பரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்….
மகாராஷ்டிரா ஓபன் சாம்பியன்கள் ரோகன், ராம்குமார் முன்னேற்றம்
previous post