மகள் இறந்த துக்கம் தாளாமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை: காக்களூரில் சோகம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூந்தோட்டம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவரது தந்தை ராமதாஸ் (53). தாய் ஈஸ்வரி. இதில் ராமதாஸ் மாதவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸின் மகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் அவர் உயிரிழந்ததிலிருந்து ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த ராமதாஸ் இரவு வழக்கம் போல் தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் விக்னேஷ் வேலைக்குச் செல்வதற்காக தந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையை தட்டியுள்ளார். அப்போது ராமதாஸ் கதவைத் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், பின் பக்க ஜன்னலை திறந்து பார்த்தபோது மின்விசையில் ராமதாஸ் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது ராமதாஸ் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை