சேந்தமங்கலம், டிச.30: கொல்லிமலை ஒன்றியம், எடப்புளிநாடு ஊராட்சி, செங்கரையில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷனை, சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை எஸ்ஐக்கள் செல்வம், சுப்பிரமணி மற்றும் போலீசார் வரவேற்றனர். இதையடுத்து நீதிபதி போலீஸ் ஸ்டேஷனில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்குகளை விசாரிக்க குற்றம் நடந்த இடத்திற்கு செல்வதற்கு, வாகன வசதி உள்ளதா, ஸ்டேஷனில் எத்தனை போலீசார் பணியாற்றுகின்றனர். வழக்குகளை உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு, ஸ்டேஷனில் போதிய பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதி திடீர் ஆய்வு
previous post