போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு

 

பேரையூர், ஜூலை 2: சேடபட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் காசிமாயன். அதே ஊரை சேர்ந்தவர் பாண்டி. மதுரையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இருதரப்புக்கும் சொத்து சம்பந்தமாக கடந்த 2012ல் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் காசிமாயனுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வர கூடும் எனக் கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் தூங்கி கொண்டிருந்த காசிமாயனை சிலர் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த காசிமாயனை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி ஜிஹெச்சில் சேர்த்தனர். இதுகுறித்து அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரில் சேடபட்டி போலீசார் பாண்டி, இவரது மனைவி ரோஸ்மேரி, சுகப்பெருமாள், அறிவு முனியாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை