போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி

சென்னை: வள்ளுவர் கோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதை ஆசாமி ஒருவர், பீர் பாட்டிலை உடைத்து பொதுமக்களை மிரட்டுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தலைமை காவலர் தினேஷ் அங்கு சென்றபோது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி முருகன் (24) என தெரியவந்தது. அவரை பிடிக்க முயன்றபோது, அருகில் வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று தலைமை காவலரை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தலைமை காவலர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடி முருகனை தேடி வருகின்றனர்….

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்