கோவை, ஜன.20: கோவை ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி அருகே போக்குவரத்து காவலர் ஆனந்தன் (30) நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் சென்ற 3 பேரை காவலர் ஆனந்தன் தடுத்து நிறுத்தினார். உடனே அவர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பிச்சென்றனர். உடனே காவலர் ஆனந்தன் தனது பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த 3 பேரும் ஒரு ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்துகொண்டிருந்தனர்.
அவர்களை காவலர் ஆனந்தன் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அந்த 3 பேரும் காவலர் ஆனந்தனின் சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆனந்தன் அந்த 3 பேரையும் மடக்கிப்பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். விசாரணையில், பிடிபட்டவர்கள் ஹபீப் (23), அப்துல் (25) செல்வபுரம், அலாவுதீன் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.