போயா படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் பலி

தூத்துக்குடி, அக். 9:தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலனியை சேர்ந்தவர் சண்முகம் ஈசாக் (52). மீனவரான இவர் நேற்று அதிகாலையில் திரேஸ்புரத்தில் இருந்து 6 பேருடன் கணவாய் மீன் பிடிப்பதற்காக நாட்டுப்படகில் கடலுக்கு சென்றார். இவர்கள் தூத்துக்குடியில் இருந்து 25 கடல்மைல் தொலைவில் படகை நிறுத்தி விட்டு, சிறிய போயா படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஈசாக்கும் போயா படகில் இருந்தபடி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஈசாக் படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஈசாக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஈசாக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு