போதையில் ரகளை பெண்கள் மீது வழக்குப்பதிவு

 

அண்ணாநகர், செப்.11: கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள பிரபல பாரில், 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் 4 பெண்கள் மது அருந்திவிட்டு வெளியே வந்தனர். இவர்கள், திடீரென நடுரோட்டில் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.

அப்போது, அந்த பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன் ஆபாசமாக பேசி, தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து 4 பெண்களையும் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். பின்னர், அரசு ஊழியர்களை பணிகள் செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசி தாக்க முயன்றது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி