போதையில் கார் ஓட்டி விபத்து பெண் அதிகாரி மீது 4 பிரிவுகளில் வழக்கு

வேளச்சேரி: கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ரேஷ்மா (29).   சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.  இவர், கடந்த 14ம் தேதி இரவு 10.30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மயிலாப்பூர் நோக்கி அடையாறு திரு.வி.க.பாலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். சிவாஜி மணிமண்டபம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி,  சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த ரேஷ்மா, காரிலேயே மயங்கி சரிந்தார். தகவலறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, ரேஷ்மா மீட்டனர்.அப்போது, அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் போதையில் இருப்பது உறுதியானது.  இதையடுத்து, போதையில் வாகனம் ஓட்டியது உட்பட 4 பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து,  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது