போதைப்பொருள் விற்ற வழக்கில் தான்சானியா பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: போதைப்பொருள் விற்ற வழக்கில், தான்சானியா பெண் உட்பட 4 பேரை  கைது செய்த போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் கடந்த 12ம் தேதி போதை பொருட்கள் விற்பனை செய்த ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிரிஸ்காஅம்சா(32) கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிராம் கொண்ட கொகைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி பிரிஸ்கா அம்சாவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவல்படி, கோவையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததும், நேற்று முன்தினம் பிரிஸ்காஅம்சாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு மாணவனை கடத்திய மாஜி போலீஸ்காரர் கைது: மேலும் 4 பேருக்கு வலை

அயோத்திக்கு அழைத்து செல்வதாக 106 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி: மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் விசாரணை 10 நாளாக நோட்டமிட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்: முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்கு ஆய்வு; பின்னணியில் யார் என போலீசார் தீவிர விசாரணை