போட்டி தேர்வினை எதிர்கொள்ள ஆலோசனை

பழநி, செப். 25: பழநி சுப்ரமண்யா கலை- அறிவியில் கல்லூரியில் போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்த ஆலோசனை முகாம் நடத்தினர். செயலர் சுப்ரமணி தலைமை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் சுவேதா வரவேற்றார். பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா மாணவர்களிடம் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், நேர்முக தேர்வில் நடந்து கொள்ளும் முறை, உடை நேர்த்தி, பேச்சு முறை குறித்து எடுத்துரைத்தார். இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு