பழநி, செப். 25: பழநி சுப்ரமண்யா கலை- அறிவியில் கல்லூரியில் போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்த ஆலோசனை முகாம் நடத்தினர். செயலர் சுப்ரமணி தலைமை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் சுவேதா வரவேற்றார். பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா மாணவர்களிடம் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், நேர்முக தேர்வில் நடந்து கொள்ளும் முறை, உடை நேர்த்தி, பேச்சு முறை குறித்து எடுத்துரைத்தார். இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.