போடி-சென்னை ரயிலுக்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட கோரிக்கை

போடி, ஜூலை, 29: போடி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள முந்தல் மலை அடிவார கிராமத்தில்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 9வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி வளாகத்தில், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், மழை வளம் பெருகவும் அவரது நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், போடியிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரை சூட்ட வேண்டும் என கிராம மக்களின் சார்பாக தென்னக ரயில்வே துறைக்கும், ஒன்றிய அமைச்சருக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டன.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி