போடி, செப். 14: தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சிபுரம், கண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(34). விவசாய கூலி தொழிலாளி. கடந்த 4ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவர் கருப்பசாமியை வழிமறித்து அவதூறாக பேசி தகராறு செய்தாராம். இதுதொடர்பாக கருப்பசாமி, அவரது தம்பி கணேசன் மூர்த்தி ஆகியோர் தேவா, அவரது நண்பர்கள் ராமச்சந்திரன் மற்றும் பெயர் தெரியாதவர் உட்பட 3 பேரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினராம். மேலும், கல்லால் அவரது தலையில் தாக்கிவிட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த கருப்பசாமி தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா(30) நேற்று முன் தினம் அளித்த புகாரின்பேரில் தேவா, அவரது நண்பர்கள் ராமச்சந்திரன் உட்பட மொத்தம் 3 பேர் மீது போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.