போச்சம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

போச்சம்பள்ளி, ஜூன் 12: போச்சம்பள்ளி அடுத்த பெரியபுளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் – ஷோபா தம்பதியினர். விவசாயியான இவர்கள் 2 மாடுகளை வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் 2 மாடுகளையும் தோட்டத்தில் கட்டிவிட்டு விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது, மாடு ஒன்று அங்குள்ள 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை