பரமக்குடி, ஜூன் 21: அரசு போக்குவரத்து கழகத்தில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் ஒய்வு பெற்ற ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்த அனைத்து பணிமனைகளிலும் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு காரைக்குடி மண்டல ஏஐடியுசி தலைவர் செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒய்வு பெற்ற தொழிலாளர்களை பணியமர்த்துவதன் மூலம், இவர்களை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க அனுப்பும் வாய்புள்ளது. இதனால்,பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே, காலிப் பணியிடங்களை உடனே நிறப்பவேண்டும். ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவதால் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கூறினார்.