பொன்னமராவதி அருகே காரையூர் ஊராட்சி பகுதியில் தூய்ைம பணி

பொன்னமராவதி,செப்.25: பொன்னமராவதி பகுதியில் ஊராட்சிகள் தூய்மை சேவைப்பணி நடக்கின்றது. பொன்னமராவதி பகுதியில் தூய்மை காவலர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. காரையூர் ஊராட்சி பகுதிகளில் சாலை, அரசு அலுவலகங்கள், பொது இடங்களை சுத்தம் செய்யப்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர் முகமது இக்பால், ஊராட்சி செயலாளர் பழனியப்பன் எம்ஜிஎன்ஆர்ஜிஎஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர், பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதே போல அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், கூடலூர், சேரனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி மற்றும் திடக்கழிவு தரம் பிரித்தல் போன்ற பணிகள் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கொண்டு நடைபெற்றது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்