சென்னை: சென்னைமாநகராட்சி திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, கொளத்தூர், பெரவள்ளூர் ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டிய 22 பேரை கண்டறிந்து அவர்களிடம் இருந்து கடந்த மாதம் மட்டும் ரூ.8600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக யார் போஸ்டர் ஒட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிக நகர் மண்டல பொறுப்பு அதிகாரி செந்தில்நாதன் தெரிவித்தார்….