பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடந்தது. இதில்  முதியோர் உதவித்தொகை, சாலை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 202 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம்   விபத்தில் இறந்த  2, இயற்கை  மரணமடைந்த 11, திருமண நிதியுதவி 2 என  15 பேருக்கு ₹7 லட்சம்  மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) .நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயதீபன்,   உதவி ஆணையர் கலால் லட்சுமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் லலிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!