பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது

சேத்தியாத்தோப்பு, ஆக. 18: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உட்பட்ட திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள 50 கிலோ மதிக்கத்தக்க முதலை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின்பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு, சிதம்பரம் பீட் வன காப்பாளர் அன்புமணி, புவனகிரி பீட் வன காப்பாளர் ஞானசேகர், ஆகியோர் சென்று முதலையை பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை