பொதுகுழு உறுப்பினர் மறைவு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும் தற்போது தலைமை பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த பெ.தேவதாஸ் (75). கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் காலை தேவதாஸ் உயிரிழந்தார். திருக்கழுக்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர்கள், துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து  எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும், வியாபாரிகளும் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். மேலும், தேவதாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளுக்கு நேற்று ஒருநாள் முழுவதும் விடுமுறை அளித்ததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்