பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது: படுக்கையுடன் கூடிய 2ம் வகுப்பு நிரம்பியது; அதிகாரிகள் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம்- நெல்லை இடையே  அதிவேக சிறப்பு ரயில் எண் (06001) தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கத்தில் நெல்லை- தாம்பரத்திற்கு அதிவேக  சிறப்பு ரயில் எண் (06002) நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே அதிவிரைவு  சிறப்பு ரயல் (06005)  மாலை 3.30 மணிக்கு  புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.  மறுமார்க்கத்தில் (06006) நாகர்கோவில் – சென்னை எழும்பூர்  அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3.10  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும் நாகர்கோவில்-  தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் (06004) வரும் 16ம் தேதி  மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில்  தாம்பரம்- நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் (06003) 17ம்  தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை  4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதைப்போன்று நெல்லை- தாம்பரம் இடையே  அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) 16ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம்  வந்தடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் (06039) 17ம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த பொங்கல் பண்டிகைக்கு  இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே 2ம் வகுப்பு  படுக்கை வசதி கொண்ட சீட்டுகள் அனைத்தும் வேகமாக நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை