சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாசபுரம், நடுகுத்தகையை சேர்ந்தவர் முருகேசன்(53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி(48). இருவரும், நேற்று முன்தினம் இரவு காக்காலூரில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு பின்னர் தங்களது பைக்கில் வீடு திரும்பினர். இந்நிலையில், ஜெயா கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் திடீரென உரசியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் சுமதி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்து ரத்தவௌ்ளத்தில் மிதந்த சுமதியை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக பலியானார்.தகவலறிந்த, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அங்கு வந்து சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் புகாரின்பேரில் தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுனரை தேடுகின்றனர். …