பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம்

வைகுண்டம், ஆக. 13: தென்திருப்பேரை அருகேயுள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (32). இவர், நேற்று பைக்கில் ஆத்தூராங்கால் வாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் விபத்துகளை தடுக்க கடம்பா குளத்தில் இருந்து வண்டல் மண் ஏற்றிக் கொண்டு செல்லும் வெளிமாவட்ட பதிவெண் கொண்ட டிராக்டர்களை கட்டுப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி