பைக்கில் வீட்டுக்கு தூக்கி சென்றபோது கன்றை பின் தொடர்ந்து 3 கி.மீட்டர் ஓடிய மாடு

பூந்தமல்லி: போரூரைச் சேர்ந்தவர் பிரசாந்த் மோகன். இவர், மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று, இவர் தனது மாடுகளை அதே பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அதில் ஒரு எருமை மாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் கன்று குட்டி ஈன்றது. இதையடுத்து, பிரசாந்த் மோகன், உறவினரை பைக்கில் அங்கு வரவழைத்து, கன்றுக்குட்டியை பைக்கில் வைத்து வீட்டிற்கு எடுத்து சென்றார். தனது கன்றுக்குட்டியை உரிமையாளர் எடுத்து செல்வதை பார்த்த எருமை மாடு, பைக்கின் பின்னால்  கன்று குட்டியை ஏக்கத்தோடு பார்த்தபடி  ஓடிவந்தது. வேகமாக செல்லும் இடங்களில் வேகமாகவும், மெதுவாக செல்லும் இடங்களில் மெதுவாகவும் தனது கன்றுக்குட்டியை தொடர்ந்து எருமை மாடும் சாலையில் ஓடி வந்தது. இதனை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து செல்போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது….

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி