பேரையூர் அருகே பெண் தற்கொலை

 

பேரையூர், ஜூன் 23: பேரையூர் அருகேயுள்ள எஸ்.ராமசாமிபுரத்தை சேர்ந்த கதிரேசன் மனைவி மணிமாலா (28). இவர் குடும்ப பிரச்னை காரணமாக விஷ விதையை அரைத்து தின்று மயங்கினார். குடும்பத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் திருமங்கலம் அருகே செல்லும் வழியிலேயே மணிமாலா உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை