பேன்சி கடை உரிமையாளர் தற்கொலை

வருசநாடு, செப். 21: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (46). இவர், ஊரில் பேன்சி கடை நடத்தி வந்தார். தொழிலை விரிவுபடுத்தவும், மனைவியின் மருத்துவச் செலவிற்காகவும் பாலன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி அடைக்க முடியாத சூழலில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த பாலன் கடந்த செப்.18ம் தேதி குமணன்தொழு அருகே உள்ள அவரது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி