பேன்சி கடையில் செல்போன் திருடியவர் கைது

திருப்பூர், ஜூன் 26: திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் சுரேஷ் (45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து, கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது ஒருவர் செல்போனை திருடி செல்வது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் செல்போனை திருடியது அருள்புரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (32) என்பது தெரியவந்தது. சுரேஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்